திட்டங்கள்
- கிராமப் பகுதிகளில் அகன்ற அலைவரிசை (பிராட்பேண்ட்) சேவை வழங்குவதற்காக, ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கிராமப்புரங்களில் உள்ள பள்ளிகளில் பயில்பவர்களின் திறனை
அதிகரிக்கும். மேலும், அரசு சேவைகளை கொண்டு சேர்க்கவும், அரசாட்சி
திட்டத்தை அமலாக்கவும் "ஈ-கிராந்தி" எனும் "இணைய புரட்சி"
அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஷியாமாபிரசாத் முகர்ஜி ஊரக நகர்ப்புற திட்டம்:
- கிராமப்பகுதிகளில் ஒருங்கிணைக்கப்பட்ட திட்ட அடிப்படையிலான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்.
- திறன் மேம்பாடு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துதல்
- தனியார்-பொது பங்களிப்பு திட்டத்தை ஊக்குவித்தல்
பண்டிட் மதன் மோகன் மாளவியா புதிய ஆசிரியர் பயிற்சித் திட்டம்
- புதிய பயிற்சிக் கருவிகளை அறிமுகம் செய்தல் மற்றும் ஆசிரியர்களை ஊக்குவித்தல்
- ரூ. 500 கோடி ஒதுக்கீடு
தீனதயாள் உபாத்யாயா கிராம ஜோதி திட்டம்
- அனைத்து குடியிருப்புகளுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்குதல்
- ஊரகப் பகுதிகளுக்கு மின் விநியோகத்தை அதிகரித்தல்
- துணை மின்பகிர்வு மற்றும் விநியோக முறையை வலுப்படுத்துதல்
- ரூ. 500 கோடி ஒதுக்கீடு
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டம்
- நகர்ப்பகுதியில் வாழ்வாதாரம் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்
இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம்
- வறுமைக்கோட்டுக்குகீழ் இருப்பவர்களுக்கான இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம்
ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேமிப்புத் திட்டம்
- நிதிமுதலீடுகளில் சேமிப்பை ஊக்குவித்தல்
ராஜீவ் காந்தி வளரிளம்பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்
- வளரிளம் பெண்களுக்கான சுயமேம்பாட்டு முயற்சிகள்
அனைவருக்கும் கல்வித் திட்டம் (சர்வ சிக்ஷா அபியான் SSA.)
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 86ஆவது பிரிவில் "6-14 வயது
வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி
அவர்களுடைய அடிப்படை உரிமை" என்று கூறப்பட்டிருக்கிறது.
- இதை நிறைவேற்றும் வகையில் குறிப்பிட்ட கால வரையரைக்குள் இந்திய
அரசு தனது முதன்மையான திட்டமாகிய "சர்வ சிக்ஷா அபியான் - எஸ்.எஸ்.ஏ.'
என்கிற (எல்லோருக்கும் கல்வி') திட்டத்தின் மூலம் ஆரம்பக்கல்வியை
அனைவருக்கும் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
- அனைத்து மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் நாடு முழுவதும்
செயல்படுத்தப்படும் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் மூலம் 11 லட்சம்
கிராமங்களைச் சார்ந்த 192 மில்லியன் குழந்தைகளின் கல்வித்தேவைகள்
பூர்த்தியாகும்.
No comments:
Post a Comment