Monday, May 14, 2018

சித்தர் பாடல் - 6 ஆம் வகுப்பு

வைதோரைக் கூடவை யாதே -இந்த
வையக முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
வெய்ய வினைகள்செய் யாதே -கல்லை
வீணில் பறவைகள் மீதிலெய் யாதே.

பாம்பினைப் பற்றியாட் டாதே -உனறன
பத்தினி மார்களைப் பழித்துக் காட்டாதே
வேம்பினை யுலகிலூட் டாதே -உன்றன்
வீறாப்பு தன்னை விளங்க  நாட்டாதே.

போற்றும் சடங்கை நண்ணாதே-உன்னைப் 
புகழ்ந்து பலரில் புகலல் ஒண்ணாதே 
சாற்றும் முன் வாழ்வை எண்ணாதே - பிறர் 
தாழும் படிக்குநீ தாழ்வைப் பண்ணாதே 

கள்ளவே டம்புனை யாதே -பல
கங்கையி லேயுன் கடம்நனை யாதே 
கொள்ளைகொள் ளநினை யாதே
கொண்டு பிரிந்துநீ கோள்முனை   யாதே

*  சித்தர்கள் - நானூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள்இவர்கள் உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிப்பட்டவர்கள்.
*  "வைதோரைக் கூட வையாதே" என்ற சித்தர் பாடலை பாடியவர் - கடுவெளிச் சித்தர்.
*  உருவ வழிபாடு செய்யாமல் இயற்கையை கடவுளாக வழிபட்டவர் - கடுவெளிச் சித்தர்.
*  சித்து - அறிவு
*  கடுவெளிச் சித்தர் பாடிய பாடல்கள் - 54.
*  நந்தவனத்தில் ஓர் ஆண்டின் அவன் நாடாறு மாதமாய் என்ப் பாடியவர் - கடுவெளிச் சித்தர்.
*  பாம்பாட்டிச் சித்தர்குதம்பைச் சித்தர்அழுகினிச் சித்தர் - இவை காரணப்பெயர்கள்.

சொற்பொருள்:
*  வேம்பு - கசப்பான சொற்கள்.
*  வீறாப்பு - இறுமாப்பு
*  கடம் - உடம்பு.
*  சாற்றும் - புகழ்ச்சியாக்ப் பேசுவவது.
*  கடம் - உடம்பு
*  வெய்யவினை - துன்பம் தரும் செயல்
*  சாற்றும் - புகழ்ச்சியாகப் பேசுவது
*  பலரில் - பலர் + இல்(வீடுகள்)

No comments:

Post a Comment