Thursday, May 31, 2018

திருவள்ளுவமாலை - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

        தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட 
        பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு
        வள்ளைக்(கு) உறங்கும் வளநாட! வள்ளுவனார் 
        வெள்ளைக் குறட்பா விரி 
                                                                                           - கபிலர் 
நூல் குறிப்பு: 
  •   திருக்குறளின்  சிறப்பை உணர்த்த திருவள்ளுவமாலை என்னும் தனிநூல்  ஒன்று இயற்றப்பட்டது . 
  •  இந்நூலில் 53  புலவர்கள் பாடிய 55 பாடல்கள் உள்ளன.   
  • இப்பாடல்  அறிவியல் அணுகுமுறையை சார்ந்தது. 
உவமை: 
  •  சிறுபுல்லின்  தலையில் தினையளவினும் சிறுபனிநீர் நெடிதுயர்ந்த பனை மரத்தின் உருவத்தை தன்னுள்  தெளிவாக காட்டும். 
உவமிக்கப்படும் பொருள்: 
  •   வள்ளுவரின்  குறள் வெண்பாக்கள் அருள்பெறும் கருத்துக்களைத் தம்மகத்தே அடக்கிக் காட்டும். 

அறிவியல் கருத்து: 
  •   ஒளியைக்  கோட்டம் அடையச் செய்வதனால் தொலைவிலுள்ள  பொருளின் உருவத்தை அண்மையில் தோன்றும்படி  செய்யலாம் என்று  கண்டவர் கலீலியோ கலிலி. 
  •   நெடுந்தொலைவிலுள்ள  பெரிய பனைமரத்தின் உருவத்தைப் புள் நுனியில்  தேங்கிய சிறுபனித்துளி மிகத்தெளிவாகக்  காட்டும் என்ற கபிலரின் சிந்தனை  அன்றைய தமிழரின் அறிவியல் கருத்தை  வெளிப்படுத்துக்கிறது. 

ஆசிரியர் குறிப்பு: க.சச்சிதானந்தன் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

  •   இயற்பெயர் -  க.சச்சிதானந்தன் 
  •   ஊர் -  இலங்கையில் யாழ்ப்பாண  மாவட்டத்திலுள்ள  பருத்தித்துறை 
  •   பணி- ஆசிரியர்  பயிற்சி கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார் 
  •   புலமை - தமிழ்,  ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளில் ஆழ்ந்த        புலமை பெற்றிருந்தார்  
  •  படைப்புகள் -  ஆனந்தத்தேன்(கவிதைத்தொகுதி-1954), அன்னபூரணி(புதினம்),  யாழ்பாணக்காவியம்
  •  சிறப்பு -  மகாவித்துவான் நவநீதகிருட்டின பாரதியின் மாணவர். இவர் தம்  பாடல்களில் கம்பனின்  மிடுக்கையும், பாரதியின் சினப்போக்கையும்  ஒருமித்துக் காணலாம்.

ஜி.யு.போப் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

  •   பெயர் -  ஜியார்ஜ் யுக்ளோ போப் என்று அழைக்கப்படும் ஜி.யு.போப்
  •   பிறந்த ஊர் - பிரான்ஸ் நாட்டின் எட்வர்ட் தீவு
  •   பிறப்பு -  கி.பி.1820ஆம் ஆண்டு ஏப்ரல் 24ம் நாள் பிறந்தார் 
  •   பெற்றோர் - ஜான் போப், கேதரின்  யூக்ளோ போப் 
  •   போப்பின்  தமையனார் ஹென்றி என்பவர், தமிழகத்தில்  கிறித்துவமதத்தைப்  பரப்பும் சமய குருவாகப்  பணியாற்றினார்.    அவரைப்போன்று  பணியாற்ற  விரும்பி, தமது 19வது வயதில் தமிழகம்  வந்தார்.
  •  அவர் பாய்மரக்  கப்பலில் தமிழகம் வந்து சேர எட்டு மாதங்கள் ஆகின.
  •   தமிழ்நாட்டில்  சென்னை சாந்தோம் பகுதியில் முதலில் சமயப்பணி ஆற்றினார். திருநெல்வேலி  மாவட்டம் சாயர்புரம் என்னும் பகுதியில் சமயப்பணி ஆற்றினார். அங்கு பள்ளிகளை  நிறுவினார். கல்விப்பனியையும் சமயப்பணியையும் ஒருங்கே ஆற்றினார்.
  •  சமயக்கல்லூரியில்  தமிழ் இலக்கியங்கள், ஆங்கில இலக்கியங்கள் முதலியவற்றையும் கிரேக்கம், இலத்தின்,  எபிரேயம் முதலிய மொழிகளையும் கற்றுத்தர ஏற்பாடு செய்தார்.
  •  கணிதம், அறிவாய்வு(தருக்கம்),  மெய்யறிவு(தத்துவம்) ஆகியவற்றை கற்பிக்கும் கல்லூரி ஆசிரியராகவும் பணியாற்றினார்.
  •   திருநெல்வேலியில்  1842 முதல் 1849 வரை கல்விப் பணியும் சமயப்பணியும்  ஆற்றினார் .
  • 1850இல்  இங்கிலாந்து சென்று திருமணம் செய்துக்கொண்டு, தம் மனைவியுடன் மீண்டும் தமிழகம்  வந்து தஞ்சாவூரில் சமயப்பணி ஆற்றினார்.
  • தஞ்சையில்  பணியாற்றிய எட்டு ஆண்டுக் காலத்தில், புறநானூறு முதலான சங்க நூல்களையும் நன்னூல்  முதலான இலக்கணங்களையும் பயின்றார்.
  •  அவற்றை  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
  •  இந்தியன்  சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு போன்ற ஏடுகளில் ஆராய்ச்சி கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினார்.
  •  அக்கட்டுரைகளில்  புறநானூற்றுப் பாடல்களும், புறப்பொருள் வெண்பாமாலைத் திணை விளக்கங்களும்,  தமிழ்ப்புலவர் வரலாறும் இடம் பெற்றன.
  •  போப் உயர்ந்த  பண்பாட்டுக்குரிய பொறுமை, சினமின்மை, நட்பு முதலானவற்றை விளக்கும் 600  செய்யுள்களை, நீதிநூல்களில் இருந்து எடுத்து,   தமிழ் செய்யுட் கலம்பகம்  என்னும் தொகுத்து அதன் விளக்கங்களையும் எழுதி வெளியிட்டார்.
  •  பள்ளி  குழந்தைகளுக்காக வினாவிடை முறையில் இரு இலக்கண நூல்களை எழுதி வெளியிட்டார்.
  •  பெரியவர்கள்  கற்கும் வகையில் இலக்கண நூலொன்றையும் படைத்தார்.
  •  மேலை நாட்டார்  தமிழை எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் தமிழ்-ஆங்கில அகராதி ஒன்றையும், ஆங்கிலம்-தமிழ் அகராதி ஒன்றையும் எழுதி வெளியிட்டார்.
  •   பழைய தமிழ் இலக்கியங்களில்  இருந்து சில செய்யுள்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டு, அதனைப் பாடநூலாக வைக்க  ஏற்பாடு செய்தார்.
  • 1858ஆம் ஆண்டு  உதகமண்டலம் சென்ற அவர், பள்ளி ஒன்றைத் தொடங்கி அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
  • இங்கிலாந்திற்கு  சென்ற போப் 23 ஆண்டுகள் இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு  கற்பிக்கும் பேராசிரியராக பணிபுரிந்தார்.
  •   திருக்குறளை 40  ஆண்டுகள் படித்துச் சுவைத்த போப் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1866ஆம் ஆண்டு  வெளியிட்டார்.
  •   தமது 86ஆம்  வயதில் 1900ஆம் ஆண்டு திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பினை வெளியிட்டார்.
  • 13.02.1908  அன்று போப் தம் இன்னுயிரை நீத்தார்.
  •  அவர், தம்  கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என எழுத வேண்டும் என்று தமது இறுதிமுறியில்  எழுதி வைத்தார்.
  •  அவர்  தமிழ் மாணவன் என்றே தம்மை கூறிக்கொண்டார்.

தமிழ் வளர்த்த சான்றோர் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

வீரமாமுனிவர்(1680-1747)


 
  •  வீரமாமுனிவர் இத்தாலி  நாட்டில் பிறந்தார். 
  • வீரமாமுனிவரின்  இயற்பெயர் கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி   தம்  முப்பதாம் வயதில் தமிழகம் வந்தார். 
  •  தமிழின் மீது  கொண்ட பற்றின் காரணமாக தன் பெயரை தைரியநாதன் என  மாற்றிகொண்டார்.   பின்னர்  தனித்தமிழுக்கு ஏற்ப வீரமாமுனிவர்  என மாற்றம் பெற்றது. 
  •  தமிழில்  முதன்முதலாக சதுரகராதி  என்னும் அகரமுதலியை படைத்தார். 
  •  கிறித்துவ  சமயத்தாரின் கலைக்களஞ்சியம் எனப் போற்றப்படும்  தேம்பாவணி என்னும் காப்பியத்தை படைத்தார். 
  •   தமிழ் எழுத்து  வரிவடிவத்தை திருத்தி, எழுத்துச் சீர்திருத்தம் செய்தார். 
  •  குட்டித்  தொல்காப்பியம் எனப் போற்றப்படும் தொன்னூல் விளக்கம்  படைத்தார். 
  •   கலம்பகம்,  அம்மானை போன்ற சிற்றிலக்கிய வகை நூல்களையும்,  பரமார்த்த குரு கதை என்னும்  நகைச்சுவை நூலையும் படைத்தார். 
  •  " தேம்பாவணி,  காவலூர் கலம்பகம் கதம்ப மாலையாக காட்சி அளிக்கிறது. தொன்னூல் பொன்நூலாக  இலங்குகின்றது. சதுரகராதி முத்தாரமாக மிளிர்கிறது. வீரமாமுனிவர் தமிழ்  முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்"  என ரா.பி.சேதுபிள்ளை பாராட்டுகிறார்

குணங்குடி  மஸ்தான்(1788-1835)
  •  "மாதவஞ்ச்சேர்  மேலோர் வழுத்தும் குணங்குடியான்  "என்று  அழைக்கப்படுபவர். 
  •  இயற்பெயர் -  குணங்குடி மஸ்தான் சாகிபு.  
  •  இளம்வயதிலே  முற்றும்  துறந்தவராய் வாழ்ந்தவர்.
  •  இவர்  தாயுமானவர் பாடல்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார் .
  •  அவருடைய  பராப்பரக்கண்ணிப் போலவே ஓசை நயம் மிக்க பாடல்கள் பல  இயற்றியுள்ளார். 
  •   பராப்பரக்கண்ணி,  எக்காலக்கண்ணி, மனோன்மணிக்கண்ணி,  நந்தீஸ்வரக்கண்ணி முதலியன இவர் பாடிய சில  கண்ணிகள். 
  •  இவர்தம்  பாடல்கள், உலகின் உண்மை நிலையை உணர்த்தி அழியாப்  பேரின்பப் பெருவாழ்விற்கு நம்மை  அழைத்து செல்லும். 
  •   இவர் குருநிலை,  தவநிலை, துறவுநிலை, நியமநிலை, காட்சிநிலை,  தியானநிலை, சமாதிநிலை எனப் பொருள்தரும்  வகையில் பாடல்கள் பல  இயற்றியுள்ளார். 
  •  இவர் மீது  கொண்ட பற்றின் காரணமாக திருத்தணி சரவணப் பெருமாள்    நான்மணிமாலை ஒன்று  இயற்றியுள்ளார். 
  •  அந்நூலில் "மடல் சூல்புவியில உளத்திருளைக் கருணை ஒளியினாற்  களைந்து, விடல்சூழ்பவரின் குணங்குடியான், மிக்கோன் எனற்கு ஓர்  தடையுளதோ? எனக் கேட்கிறார்.
  •  "தடை உண்டு என உரைப்பார்  தமிழுலகில் இல்லை "என்கிறார். 
ஆறுமுக நாவலர்(1822-1879)
  • ஆறுமுக நாவலர்  யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். 
  •   இவருடைய  இயற் பெயர்   ஆறுமுகனார். 
  •   இளமையிலே சைவ  சிந்தாந்த சாத்திரங்கள் படித்தவர். 
  •   இவரின்  சொற்பொழிவு திறமையை கண்டு திருவாவடுதுறை ஆதினம்       இவருக்கு நாவலர் பட்டம் வழங்கினார். 
  •   இவர் சிறந்த  பதிப்பாசிரியர் மற்றும் உரையாசிரியர். 
  •   நாவலரே முதன்  முதலில் இலக்கண வலுவற்ற தூய்மையான எளிய        தமிழ்   உரைநடையை கையாண்டார். 
  •   தமிழ்  உரைநடைக்கு இவர் ஆற்றிய தொண்டிற்காக பரிதிமாற்கலைஞர்     இவரை வசன நடை கைவந்த  வல்லாளர் என பாராட்டினார். 
  •   சென்னையில்  அச்சுக்கூடம் நிறுவி, சிறந்த தமிழ் நூல்கள் பல    பதிப்பித்தார். 
  •   பாரதம்,  பெரியபுராணம், கந்தபுராணம், திருக்குறள் பரிமேலழகர் உரை  போன்ற    இலக்கிய நூல்களை  பதிப்பித்தார். 
  •   இலக்கண  வினாவிடை, இலக்கண சுருக்கம், நன்னூல் விருத்தியுரை,    நன்னூல்    காண்டிகையுரை, இலக்கண  கொத்து, இலக்கண சூறாவளி  முதலிய இலக்கண     நூல்களை பதிப்பித்து வெளியிட்டார். 
  •   முதல் வகுப்பு  முதல் நான்காம் வகுப்பு வரை பாலபாடங்களையும் எழுதி        அச்சிட்டு வெளியிட்டார்.

யார் கவிஞன்? - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

                    யார்  கவிஞன்?    
  
                    காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன்;

               கைம்மாறு விளைந்துபுகழ் பெறுதல் வேண்டி

        மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை

              மறைத்துவிட்டுப் பாடுபவன் கவிஞன் அல்லன்;

        தேசத்தைத் தன்னினத்தைத் தாழ்த்தி    விட்டுத்

             தேட்டையிடப் பாடுபவன் கவிஞன் அல்லன்;

        மீசைக்கும் கூழுக்கும் ஆசைப் பட்டு

             மேல்விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன்;

        ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவ ரேனும்

          ஆள்கஎனத் துஞ்சாமல், தனது நாட்டின்

        மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவன்;

          மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது

        காட்சிக்குப் புளியாகிக் கொடுமை மாளக்

          கவிதைகளைப் பைசுபவன் கவிஞன் ஆவன்;

        தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம்

          தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன்.

சொற்பொருள்:

  1.   கைம்மாறு –  பயன்
  2.   மாசற்ற –  குற்றமற்ற
  3.   தேட்டையிட –  செல்வம் திரட்ட
  4.   மீட்சி –  மேன்மை
  5.   மாள நீங்க
ஆசிரியர் குறிப்பு:

  பெயர்                : முடியரசன்

  இயற்பெயர்           : துரைராசு

  பெற்றோர்            : சுப்புராயலு, சீதாலட்சுமி

  ஊர்                  : தேனி  மாவட்டம் பெரியகுளம்

  இயற்றிய  நூல்கள்   : பூங்கொடி, காவியப்பாவை, வீரகாவியம்
                                                         முடியரசன்   கவிதைகள் முதலியன.                
                       
  பணி                : தமிழாசிரியர், மீ.சு. உயர்நிலைப்    
                        பள்ளி, காரைக்குடி.

  பட்டம்              :  பறம்புமலையில் நடந்த விழாவில் கவியரசு    
                        என்னும் பட்டம் குன்றக்குடி அடிகளாரால்
                        வழங்கப்பெற்றது.

  பரிசு               :  பூங்கொடி என்னும் காவியத்திற்காக 1966-ல் 
                        தமிழக அரசு பரிசு வழங்கியது .

  சிறப்பு              :  முடியரசன், பாரதிதாசன் பரம்பரைக் 
                        தலைமுறைக்  கவிஞர்களுள் மூத்தவர். தந்தை                           பெரியார்,  பேரறிஞர் அண்ணா ஆகியோரிடம்                              நெருங்கிப் பழகியவர்.



  காலம்             :  07-10-1920  முதல் 03-12-1998 வரை

Sunday, May 27, 2018

முதுமொழிக்காஞ்சி - 7 ஆம் வகுப்பு சமச்சீர்

1.ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
 ஓதலின் சிறந்தன்று, ஒழுக்கம் உடைமை.

  • ஆர்கலி - கடல்
  • ஓதலின் - கற்றலைப் பார்க்கிலும்
     ஓசையினை உடைய கடல் சூழ்ந்த உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் ஒழுக்கத்துடன் இருப்பது சிறந்ததாகும்.

2. காதலின் சிறந்தன்று, கண் அஞ்சப்படுதல்.
  • காதலின் - பிறரால் அன்பு செய்யப்படுவதைக் காட்டிலும்
  • சிறந்தன்று - சிறப்புடையது
     பிறர் அன்பு பாராட்டும்படி நடத்தலை விட அவர் மதிக்கும்படி நடத்தல் மேலானது.

3. மேதையின் சிறந்தன்று, கற்றது மறவாமை.
  • கற்றது - கற்ற பொருளை
  • மறவாமை - மறவாதிருத்தல்
     புதிதாக ஒன்றை அறிந்துகொள்வதை விட கற்றதை நினைவில் வைத்திருப்பது மேலானது.

4. வண்மையின் சிறந்தன்று, வாய்மை உடைமை.
  • வண்மையின் - வளமையோடிருத்தலை விட 
   செல்வத்தினும் சிறப்புடையது உண்மை வாழ்க்கையாகும்.
5. இளமையின் சிறந்தன்று, மெய் பிணி இன்மை.
  • மெய் - உடம்பு
  • பிணி இன்மை - நோயில்லாமலிருத்தல்
     நோயில்லாமல் இருத்தல் இளமையினும் சிறப்பானது.

6. நலன் உடைமையின் நாணுச் சிறந்தன்று.
  • நலன் உடமையின் - அழகுடைமையை விட
  • நாணு - நாணமுடைமை
     அழகைக் காட்டிலும் வெட்கம் சிறப்பானது.

7. குலன் உடைமையின் கற்புச் சிறந்தன்று.
  • குலன் உடைமையின் - நல்ல குணத்தையுடைமையினும்
  • கற்பு - கல்வியுடைமை
     உயர்ந்த குலத்தைக் காட்டிலும் கல்வி மேன்மையானது.

8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று.
  • கற்றாரை - கற்ற பெரியாரை
  • வழிபடுதல் - போற்றியொழுகுதல்
     கற்றலை விடக் கற்றாரை வழிபட்டொழுகுதல் மேலானது.

9. செற்றாரைச் செறுத்தலின் தற் செய்கை சிறந்தன்று.
  • செற்றாரை - பகைவரை
  • செலுத்துதலின் - ஒறுத்தலினும்
பகைவரை வெல்லுவதைவிட தன்னை மேம்படுத்திக் கொள்வது சிறப்பானது.

10. முன் பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று.
  • முன் பெருகலின் - முன்பு பெருகிப் பின் அழிதலைக் காட்டிலும்
  • சிறுகாமை - நின்ற நிலையில் குறையாதிருத்தல்
     செல்வம் பெருகி அழிவதைவிட, பெருகாமல் நிலையாக இருத்தல் நன்று.

சொற்பொருள்:
  1.   ஆர்கலி – நிறைந்த ஓசையுடைய கடல்
  2.   காதல் – அன்பு, விருப்பம்
  3.   மேதை – அறிவு நுட்பம்
  4.   வண்மை – ஈகை, கொடை
  5.   பிணி – நோய்
  6.   மெய் – உடம்பு
ஆசிரியர் குறிப்பு:
  •   பெயர்: மதுரை கூடலூர் கிழார்
  •   பிறந்த ஊர்: கூடலூர்
  •   சிறப்பு: இவர் தம் பாடல்களை  நச்சினார்க்கினியர் முதலிய      நல்லுரையாசிரியர்கள் மேற்கோள்களாக கையாண்டுள்ளர்கள்.
  •   காலம்: சங்க காலத்திற்குப்பின் வாழ்ந்தவர்.
நூல் குறிப்பு:
  •   முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின்  துறைகளுள் ஒன்று.
  •   இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  •   இந்நூலை அறவுரைக்கோவை எனவும் கூறுவர்
  •   இந்நூலில் பத்து அதிகாரங்களும்,  அதிகாரத்திற்கு பத்துச் செய்யுள் வீதம் நூறு   பாடல்களும் உள்ளன.

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் - 7 ஆம் வகுப்பு சமச்சீர்

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
   யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய பொது  நான் காப்பேன் என்று    எழுந்தவர் உ.வே.சா. அவரே அனைவராலும் தமிழ்த்தாத்தா என்று   அழைக்கபடுபவர். உ.வே.சா.வின் ஆசிரியரே மகாவித்துவான்    மீனாட்சிசுந்தரனார்.

இளமையும் கல்வியும்:
  மீனாட்சிசுந்தரனார் 1815ஆம் ஆண்டு ஏப்ரல்  6ஆம் நாள் திருச்சி மாவட்டம்     எண்ணெய்க்கிராமத்தில் பிறந்தார்.  பெற்றோர்: சிதம்பரம் – அன்னத்தாச்சியார்.  தமது தந்தையிடமே தமிழ்  கற்றார்.

கல்வியே  வாழ்க்கை:
  மீனாட்சிசுந்தரனார் திருமணம் செய்துகொண்டு  குடும்பத்துடன் திரிசிரபுரத்தில்(    திருச்சிராப்பள்ளி )  வாழ்ந்தார்.  அவரை திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரனார் என்றே   அழைப்பர். அவரிடம் கல்வி கற்க வேண்டும் என்ற வேட்கை தணியாததாக   இருந்தது.  கல்வியே வாழ்கை என்று இருந்தவர்.

தமிழ்  கற்பித்தல்:
  மீனாட்சிசுந்தரனார் சாதி, சமயம் பாராது  அனைவருக்கும் கல்வி கற்பித்தார்.  குலாம்காதர் நாவலர், சவரிராயலு,  தியாகராசர், சாமிநாதர் ஆகியோர்,    அவர்களுள் குறிப்பிடத்தக்க மாணவர்கள் . இவர் சில காலம்    திருவாவடுதுறையில் ஆதின  வித்துவானாக பணியாற்றினார்.    திருவாவடுதுறையில் வாழ்ந்த காலத்தில் தான்  உ.வே.சாமிநாதருக்கு   ஆசிரியராக இருந்தார்.

தமிழ்த்  தொண்டு:
  இவர், எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை  இயற்றியுள்ளார்.
  கோவில்களை  பற்றிய தலபுராணங்கள் பல இயற்றியுள்ளார்.

பண்பு  நலன்கள்:
  மீனாட்சிசுந்தரனார் அருங்குணமும் நிறைந்த  புலமையும் தளராத          நாவன்மையும் படைத்தவர்.  நகைச்சுவை உணர்வு மிக்கவர்
  ஒருமுறை அவரது நண்பர் ஆறுமுகம் என்பவர்,  தம்முடைய குடும்பத்     தொடர்பாக கும்பகோணத்தில் ஒருவருக்குப் பத்திரம் ஒன்று  எழுதிக்கொடுத்தார்.  அதில், சாட்சிக் கையொப்பமிட வந்த ஒருவருடைய  இருப்பிடம்     கும்பகோணத்தில் உள்ள சுண்ணாம்புக்காரன் தெரு என்பது. அதனை நீற்றுக்காரத்   தெருஎனவும் வழங்குவர். இந்த இரண்டில் எதனைப் பெயருக்கு முன்னால்     சேர்க்கலாம் என்று அவர் கேட்டபோது, மீனாட்சிசுந்தரனார்இரண்டும் வேண்டாம்,   மூன்றாவது தெரு என்று போட்டுவிடும் என்று சொன்னார். அதிலுள்ள     நகைச்சுவை உணர்வை  அனைவரும் அறிந்து மகிழ்ந்தனர். மூன்றாவது என்பது   சுண்ணாம்பைக் குறிக்கும் ஒரு  சொல்லாகும்.(வெற்றிலை + பாக்கு +     சுண்ணாம்பு)

நோய்க்கு  மருந்து இலக்கியம்:
  தனக்கு உடல்நிலை சரியில்லாத போது சற்று  ஓய்வெடுத்தல் நல்லதென்று   மற்றவர் கூற, நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறினார்.

மறைவு:
  01.02.0876 அன்று உலகவாழ்வை நீத்தார்.

கோவூர் கிழார் - 7 ஆம் வகுப்பு சமச்சீர்

  • கோவூர் கிழார்  சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.உறையூருக்கு அருகில் உள்ள கோவூரில் வேளாளர் மரபில் பிறந்தார் .
  • மன்னர்கள் பகைமையின்றிக் கூடிவாழ இவர் பெரிதும் பாடுபட்டவர். 
  • போரை விரும்பாதவர். சங்கப்புலவர்களில் சகோதரச் சண்டை பற்றிய குறிப்புகளைத் தந்திருப்பது கோவூர் கிழாரின் பாடல்கள்
  • கோவூர் கிழார், சோழ மன்னர்களைப் பற்றியே அதிகம் பாடியுள்ளார். 
  • நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, திருவள்ளுவமாலை  ஆகியவற்றில் இவரின் 18 பாடல்கள் உள்ளன
போரைத் தவிர்த்த புலவர் 
  • நலங்கிள்ளி உறையூரை முற்றியிருந்தான். 
  • நெடுங்கிள்ளி கோட்டையை அடைத்துக்கொண்டு உள்ளே இருந்தான். 
  • கோவூர் நெடுங்கிள்ளிக்கு அறிவுரை கூறினார். போரிடுபவன் சேரனோ, பாண்டியனோ அல்லன். 
  • சோழன். யார் தோற்றாலும் சோழனுக்குத் தோல்வி. இதனைக் கண்டு பகைவர் நகைப்பர் என அறிவுரை கூறினார். 
  • இதனைக் கேட்ட நெடுங்கிள்ளி, நலங்கிள்ளிக்கு விட்டுக்கொடுத்தான் எனத் தெரியவருகிறது.
சிறை மீட்ட செம்மல் 
  • நலங்கிள்ளியிடம் இருந்த இளந்தத்தன் என்னும் புலவர் முற்றுகையின்போது உறையூருக்கு வந்தார. 
  • ஒற்று வந்தார் என்று நெடுங்கிள்ளி அவரைக் கொல்லப் புகுந்தார். புலவர் பிறருக்குத் தீங்கு செய்யத் தெரியாதவர் எனக் கோவூர் கிழார் விளக்கிப் புலவர் இளந்தத்தனைக் காப்பாற்றினார்.
மலையமான் பிள்ளைகளைக் காத்தல்
  • சோழன் குளமுற்றத்துத் தூஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக் காலின் இட்டுக் கொல்லச் சென்றான். 
  • யானையைக் கண்டவுடன் அழுகையை மறந்து சிரிக்கும் குழந்தை உள்ளத்தை எடுத்துச் சொல்லி கோவூர் கிழார் குழந்தைகளைக் காப்பாற்றினார்.

பாரதியார்



*   பாரதியார் வாழ்ந்த காலம்: 11.12.1882 - 11.09.1921(அகவை 38) 

*   பாரதியார் பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரம்.

*   பாரதியாரின் பெற்றோர்: சின்னச்சாமி அய்யர் - லெட்சுமி அம்மாள்

*   பாரதியாரின் இயர் பெயர்: சுப்ரமணிய பாரதியார்.

*   பாரதியார் 1897ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார்.

*   பாரதியாரின் சிறப்பு பெயர்கள்: மகாகவி, தேசியகவி, பாட்டுக்கொரு புலவன்.

*   பாரதிக்கு மகாகவி என பட்டம் கொடுத்தவர் - வ.ரா(ராமசாமி அய்யங்கார்)

*   பாரதி தன்னை ஷெல்லிதாசன் என அழைத்துக்கொண்டார்.

*   பாரதி என்பதன் பொருள் - கலைமகள்.

*   பாரதியின் முதல் பாடல் "தனிமை இரக்கம்" வெளியிட்ட பத்திரிக்கை - மதுரையிலிருந்து வெளிவந்த "விவேக பானு" என்ற பத்திரிக்கை.

*   பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளி - மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி(1904)

*   பாரதியார் எந்த பத்திரிக்கையின் மூலம் தனது அரசியல் கருத்துக்களை மக்களிடம் பரப்பினார் - இந்தியா என்ற வாரப்   பத்திரிக்கை(1906ல் சென்னையில் பாரதியாரே தொடங்கி நடத்தினார்)

*   பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராகவும், சக்கரவர்த்தினி பத்திரிக்கையில் ஆசிரியராகவும் பணி செய்தார்.

*   பாரதியாரின் குறிப்பிடத்தக்க படைப்புகள்: பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு முதலியன.

*   பாரதியாரின் நினைவுகளை போற்றும் வகையில் எட்டையபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணி அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

*   பாரதியாருக்கு எட்டையபுரத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு பஞ்சாப் முதல்வர் தர்பாராசிங் அவர்களால் 11.12.1999 அன்று திறந்து வைக்கப்பட்டது.

படைப்புகள்:

01. குயில் பாட்டு

02. கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.

03. சுயசரிதை

04. தேசிய கீதங்கள்

05. பகவத் கீதை

06. பாரதி அறுபத்தாறு

07. ஞானப் பாடல்கள்

08. தோத்திரப் பாடல்கள்

09. விடுதலைப் பாடல்கள்

10. விநாயகர் நான்மணிமாலை

11. பாரதியார் பகவத் கீதை (பேருரை)

12. பதஞ்சலியோக சூத்திரம்

13. நவதந்திரக்கதைகள்

14. உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கு

15. ஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்)

16. சின்னஞ்சிறு கிளியே

17. ஞான ரதம்

18. பகவத் கீதை

19. சந்திரிகையின் கதை

20. பாஞ்சாலி சபதம்

21. புதிய ஆத்திசூடி

22. பொன் வால் நரி

23. ஆறில் ஒரு பங்கு

இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்

* ஒரு திட்டங்களின் மூலம் பல நோக்கங்களை சென்றடைவதே பல்நோக்குத் திட்டங்கள் ஆகும். இவை ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்களே ஆகும்.

* ஒரு ஆற்றுப்பகுதி முழுவதும் ஒரு திட்டத்திற்குரிய பரப்பாகவே கருதப்படுகின்றன. இத்திட்டங்கள் நீர்ப்பாசனம், நீர் வளம், வெள்ளத் தடுப்பு, தொழில் வளம், மண் அரிப்பு தடுப்பு, காடு வளர்ப்பு, மீன் பிடிப்பு, மின் சக்தி் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக அமைக்கப்படுகின்றன.

* ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள் நவீன இந்தியாவின் புதிய கோயில்கள் என்று புகழப்பட்டு வருகின்றன. இத்தகைய திட்டங்களின் முதல் பல்நோக்குத் திட்டமாக

அமைக்கப்பட்ட திட்டம் தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் ஆகும். இவை வெள்ளப்பெருக்கைத் தடுக்கும் திட்டமாகும்.

தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம்

* சோட்டா நாகபுரி பகுதியிலிருந்து மேற்கு வங்காளம் வரை பாய்ந்து வருகிறது தாமோதர் நதி.

* தாமோதர் நதி கோடைக்காலங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பை வெள்ளத்தில் மூழ்கச் செய்து வருகின்றன.

* இதனால் தாமோதர் ஆறு இந்தியாவின் துயரம் என்று வர்ணிக்கப்படுகிறது.

* 1948ல் தாமோதர் பள்ளத்தாக்குக் கழகம் துவங்கப்பட்டது.

* இக்கழகம் சுமார் ரூ.150 கோடியில் திலாயா, கோனார்.பாஞ்சத், மைதான் ஆகிய நான்கு இடங்களில் அணைகளைக் கட்டியுள்ளது.

* மேலும் தாமோதர் பள்ளத்தாக்கில் காணப்படும் இரும்பு மற்றும் நிலக்கரி வளத்தையும் பயன்படுத்த ஆலோசித்து வருகின்றன.

* இத்திட்டத்தின் உதவியால் ஜாம்ஷெட்பூர், துர்க்காப்பூர், குல்டி ஆகிய இடங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளும் மிகுந்த  பயன் பெற்றி வருகின்றன.

* இத்திட்டத்தின் பயனை பீகார் (ஜார்க்கண்ட்) மற்றும் மேற்கு வங்காளம் இரு மாநிலங்களும் பெற்று வருகின்றன. மேலும் மத்தியப்பிரதேசமும் இதன் பயனை பங்கிட்டுக்கொள்கின்றன.

ஹிராகுட் திட்டம்

* இத்திட்டம் மகாநதியின் மீது 1948-ல் தொடங்கப்பட்டு 1957-ல் முடிவடைந்தது. இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.83 கோடி.

* இத்திட்டத்தின் கீழ் மகாநதியின் மாது ஒரிசாவில் ஒரு நீண்ட அணை கட்டப்பட்டது. அதாவது 4.8 கிமீ நீளமும், 61 மீட்டர் உயரமும் உடைய இந்த அணைக்கட்டுதான்  உலகின் மிக நீண்ட அணைக்கட்டு ஆகும்.

* இந்த அணை சுமார் 810 கோடி கியூபிக் மீட்டர் நீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்டது. இத்திட்டத்தின் கீழ் 9 மின்சக்தி நிலையங்கள் கட்டப்பட்டு 270 மெகாவாட் நீர் மின் சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.

* திக்காரா மற்றும் நாராஜ் ஆகிய அணைகள் இத்திட்டத்தின் கீழ் அமைந்துள்ளன. வெள்ளத் தடுப்பு, ஒரிசாவின் இயற்கை வளப்பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது இத்திட்டமாகும்.

துங்கபத்ரா திட்டம்

* துங்கபத்ரா நதி, துங்க் மற்றும் பத்ரா ஆகிய இரு ஆறுகளின் இமைப்பாகும்.

* ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களின் கூட்டு முயற்சியே இத்திட்டமாகும்.

* கர்நாடகாவில், பெல்லாரி மாவட்டத்தில் உள்ள மல்லபுரம் பகுதியில் ஒரு அணை கட்டப்பட்டுள்ளது. சுமார் 2.5 கிமீ நீளமும், 50 மீ உயரமும் உடையது. இங்கிருந்து சுமார் 225 கிமீ நீளத்திற்கு ஒரு கால்வாயும், 350 மீட்டர் நீளத்திற்கு மற்றொரு கால்வாயும் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

* இத்திட்டத்தின் கீழ் 14 மின் சக்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு 126 மெகாவாட் நீர்மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

பக்ரா நங்கல் திட்டம்

* இந்தியாவின் மிகப்பெரிய பல்நோக்குத் திட்டம் பக்ரா நங்கல் திட்டம் ஆகும். சிந்துவின் துணையாறாகிய சட்லஜ் ஆற்றின் குறுக்கே பக்ரா என்னும் இடத்தில் ஒரு அணை கட்டப்பட்டுள்ளது.

* இத்திட்டத்தினால் பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பயன் பெறுகின்றன. இத்திட்டம் நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

* சட்லஜ் ஆற்றின் குறுக்கே, பக்ரா என்னும் இடத்தில் 226 மீட்டர் உயரத்துடன், 518 மீட்டர் நீளத்துடனும் அணை கட்டப்பட்டுள்ளது. பக்ரா உலகின் உயரமான அணை ஆகும்.

* இந்த அணையால் உருவான மனிதனால் கட்டப்பட்ட, 8 மீட்டர் அகலமும், 80 கிமீ நீளமும் கொண்ட மிகப்பெரிய செயற்கை ஏரிக்கு, சீக்கியர்களின் 10-வது குருவான, குரு கோவிந்த் சிங் என்பவரின் நினைவாக கோவிந்த் சாகர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஹிமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.

* பக்ரா அணைக்குக் கீழாக 13 கிமீ தொலைவில் நங்கல் என்னுமிடத்தில் 29 மீட்டர் உயரத்துடன் 305 மீட்டர் நீளத்துடன் கட்டப்பட்டுள்ளது. இதுவும் சட்லஜ் ஆற்றின் மீதே அமைந்துள்ளது. இங்கிருந்து நங்கல் நதிநீர்க்கால்வாய் தொடங்குகிறது.

* சட்லஜ் ஆற்றின் மீது பக்ரா நங்கல் அணைக்குக் கீழாக 13 கிமீ தொலைவில் நங்கல் என்னுமிடத்தில் 29 மீட்டர் உயரத்துடன் 305 மீட்டர் நீளத்துடன் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து நங்கல் நதிநீர்க்கால்வாய் தொடங்குகிறது.

* பக்ராவில் 2 மின்சக்தி நிலையங்கள் கட்டப்பட்டு, அவற்றின் மூலம் 210 மெகாவாட் நீர் மின்சக்தி பெறப்படுகிறது. மேலும் நங்கல் கால்வாய்த் திட்டத்திலும் 2 மின்சக்தி நிலையங்கள் உள்ளன.

* 64 கிமீ நீளமுடைய நங்கல் கால்வாய் நங்கல் பகுதியில் அமைந்துள்ளது. பொதுவாக இத்திட்டதினால் 1204 மெகாவாட் மின்சக்தி கிடைக்கிறது. அத்துடன் 1100 கிமீ நீளத்திற்கு கால்வாய்கள் அமைந்துள்ளன. இத்திட்டத்தினால் 15 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவு நிலம் நீர்ப்பாசன வசதி பெறுகிறது.

கோசி திட்டம்

* பீகாரில் உள்ள கோசி நதியின் மீது நேபாளத்தின் உதவியுடன் கோசி திட்டம் அமைக்கப்பட்டது. வெள்ளத் தடுப்பே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

* கோசி ஆறு பீகாரின் துயரம் என்று வர்ணிக்கப்படுகிறது. இதன் முக்கிய கால்வாய் ஹனுமான் நகர் தடுப்பு வரை செல்கிறது.

* கோசி திட்டத்தால் பயன் பெறும் மாநிலம் பீகார் மற்றும் நேபாளம்.

* இதே போன்று இந்தியாவும், நேபாளமும் இணைந்து செயல்படுத்தி உள்ள மற்றொரு திட்டம் கண்டக் திட்டமாகும்.

நாகார்ஜூனா திட்டம்

* ஆந்திரா மாநிலத்தில் கிருஷ்ணா நதி மீது அமைந்துள்ள திட்டமாகும். புத்த துறவியாகிய நாகார்ஜூனரை நினைவுப்படுத்தும் பொருட்டு நாகார்ஜூன சாகர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

* இத்திட்டத்தின் கீழ், ஆந்திரப்பிரதேசத்தின் நாள்கொண்டா மாவட்டத்தில் ஒரு அணை கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 1.5 கீமி உயரம் 25 மீட்டர் ஆகும்.

* இத்திட்டத்தின் மூலம் 50 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய வகையில் இரு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சம்பல் பள்ளத்தாக்குத் திட்டம்

* மத்தியப்பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களின் கூட்டு முயற்சியே இத்திட்டமாகும்.

* யமுனையின் தெற்கு கிளை நதியே சாம்பல்.

* இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் சம்பல் பகுதியின் மண் பாதுகாப்பே ஆகும்.

* இத்திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசத்தின் காந்தி சாகர் அணையும், இராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா நீர்த் தடுப்பு மற்றும் ஜவகர் சாகர் அணை, இராணா பிரதாப் சாகர் ஆகிய மூன்று அணைகள் அமைந்துள்ளன.

* இத்திட்டத்தினால் 5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு நீர்ப்பாசனம் பெற்று வருகிறது.

ரீகண்ட் திட்டம்

* சோன் நதியின் கிளை நதியான ரீகண்ட் ஆற்றின் குறுக்கே இத்திட்டம் அமைந்துள்ளன. இந்த அணையின் நீர்த்தேக்கம் கோவிந்த் வல்லப பந்த் சாகர் என்று அழைக்கப்படுகிறது.

* இந்த அணை 90 மீ உயரமும், 1020 மீ நீளமும் கொண்டது.

* இத்திட்டம் நீர்மின்சக்தியை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டது.

* உத்திரப்பிரதேசத்தின் 7 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு இத்திட்டத்தினால் நீர்ப்பாசனம் பெற்று வருகிறது. 6 அலகுகளின் மூலம் 500 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* இத்திட்டத்தின் மூலம் பிம்பிரி என்னும் இடத்தில் உள்ள இரசாயன தொழிற்சாலைகளும், ரேணுகுட் பகுதியில் உள்ள அலுமினிய தொழிற்சாலையும், ஊரசர பகுதியின் சிமெண்ட் தொழிற்சாலையும் மின் ஆற்றல் பெறுகின்றன.

இந்திராகாந்தி கால்வாய்த் திட்டம்

* இராஜஸ்தானின் மாநிலத்தின் முக்கிய திட்டமாகும் இந்த திட்டம்.

* பியாஸ் நதியின் மீது போங் அணை கட்டப்பட்டுள்ளது. பியாஸ் மற்றும் இராவி நதிகளில் உள்ள நீரை சட்லஜ் ஆற்றிற்கு திசை திருப்புவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

* கால்வாய்களி்ன் மூலம் நீரை திசை திருப்பப்படுகிறது. போங் அணையும் நீரை திசை திருப்புகிறது.

* இராஜஸ்தான் கால்வாய் அல்லது இந்திரகாந்தி கால்வாய் என்று அழைக்கப்படும் இக்கால்வாய்தான் உலகின் மிக நீளமான நீர்ப்பாசனக் கால்வாய் ஆகும்.

* இராஜஸ்தான் மாநிலத்தின் காந்தி நகர், பிக்கானீர், ஜெய்சல்மீர் போன்ற பகுதிகளை வளப்படுத்துகிறது.

* இக்கால்வாயின் உதவியால் பியாஸ், இராவி மற்றும் சட்லெஜ் ஆகிய ஆறுகளின் நீரை முழுமையாக இந்தியா பயன்படுத்த முடிகிறது.

* ரஷ்யா, கனடா, சைர், அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு அடுத்து இந்தியா ஐந்தாவது இடத்தில் உலகளவில் நீர்மின்சக்தித் துறையில் இடம் பெற்றுள்ளது.

* நமது நாட்டின் நீர்மின்சக்தி வளத்தில் 30 சதவீதம் பிரம்மபுத்திரா பகுதிகளில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் பல திட்டங்களும் செயல்பட்டு வருகின்றன.

ஷராவதி திட்டம்

* இவை ஜோக் நீர்வீழ்ச்சியில் கர்நாடாகா மாநிலம் ஷிமோகா மாவட்டம் ஷராவதி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது.

* இந்தியாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சி ஜோக் நீர்வீழ்ச்சி ஆகும். 891 மெகாவாட் உற்பத்தியுடன், பெங்களூர் பகுதியை வளப்படுத்துகிறது.

* கலினாடி திட்டம் மூலம் 270 மெகாவாட் உற்பத்தி உயர்த்தப்பட்டுள்ளது.

* ஷராவதி திட்டம் மகாத்மா காந்தி நீர்மின்சக்தித் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

குந்தா திட்டம்

* தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் குந்தா திட்டத்தின் மூலம் 425 மெகாவாட் திறனிலிருந்து 535 மெகாவாட் உற்பத்திக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

* இந்தியாவில் முதன்முதலாக 1902-ம் ஆண்டு காவிரி ஆற்றின் மீது கர்நாடகாவில் உள்ள சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சிப் பகுதியில்தான் முதல் நீர்மின்சக்தித் திட்டம் துவங்கப்பட்டது.

* இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகருக்கு மின்சக்தி வழங்குவதற்காக துவங்கப்பட்டதுதான் டாடா நீர்மின்சக்தித் திட்டம்.

* தமிழகத்தில் பைக்காரா நீர்மின்சக்தித் திட்டமே முதல் திட்டமாகும்.

* இமயமலையின் வட பகுதியான மாண்டி என்னும் பகுதியில்தான் இந்தியாவின் முதல் திட்டம் துவங்கியது எனலாம்.

* மேட்டூர் திட்டம் - தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேட்டூரில் கட்டப்பட்டுள்ள ஸ்டான்லி அணையிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

* கர்நாடகாவில் மலப்ரபா ஆற்றின் மீது மலப்ரபா திட்டம் அமைந்துள்ளது.

* கேரளாவில் பெரியாற்றின் மீது இடுக்கி திட்டம் அமைந்துள்ளது.

* கேரளாவில் சபரகிரி நதியில் 300 மெகாவாட் திறனுடன் சபரகிரி திட்டம் அமைந்துள்ளது.

* கோதாவரி மீது ஆந்திரப்பிரதேசத்தில் போச்சம்பேட் திட்டம் அமைந்துள்ளது.

* பலிமேளா திட்டம், உக்காயா திட்டம் - ஒரிசாவில் அமைந்துள்ளது.

* உத்திரப்பிரதேசம் ராம்கங்கா நதியின் மீது ராம்கங்கா திட்டம் அமைந்துள்ளது.

* ஒரிசாவில் மகாநதி மீது மகாநதி டெல்டா திட்டம் அமைந்துள்ளது.

* மேற்கு வங்காளத்தில் கங்கை மற்றும் பாகீரதி நதிகளின் மீது ஃபராக்கா திட்டம் அமைந்துள்ளது.

* குஜராத்தில் தபதி ஆற்றின் மீது காக்ரபாரா திட்டம் அமைந்துள்ளது.

* மத்தியப்பிரதேசத்தில் நர்மதையின் துணை ஆறு தவா ஆற்றின் மாது தவா திட்டம் அமைந்துள்ளது.

* போங் அணை பியாஸ் நதியின் மீது பியாஸ் திட்டம் அமைந்துள்லது. இத்திட்டத்தால் பஞ்சாப், அரியானா மற்றும் இராஜஸ்தான் மாநிலங்கள் பயன்பெற்று வருகின்றன.

* சலால் திட்டம் - ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ளது.

* மேற்கு வங்காளத்தில் கங்கை மற்றும் பாகீரதி நதிகளின் மீது ஃபராக்கா திட்டம் அமைந்துள்ளது.

* மேற்கு வங்காளத்தில் முரளி ஆற்றின் மீது மயூராக்ஷி திட்டம் அமைந்துள்ளது.

* மத்தியப்பிரதேசம், குஜராத், இராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகியவற்றால் நர்மதை மீது அமைக்கப்பட்டது - நர்மதா பள்ளத்தாக்குத் திட்டம்.

* நர்மதை நதி மீது சர்தார் சரோவர் அணை கட்டப்பட்டுள்ளது.

* இந்திய அரசு மற்றும் உத்திரப்பிரதேசத்தின் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்ட திட்டம் - தேரி மின்சக்தி திட்டம். இத்திட்டத்தின் நோக்கம் 2400 மெகாவாட் மின் உற்பத்தியே.

* ஃபராக்கா திட்டம் - இந்தியாவும் பங்காளதேஷூம் பயன்பெற்று வரும் திட்டம் ஃபராக்கா திட்டம். மேற்கு வங்காளத்தில் கங்கை நதி மீது அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டமே கொல்கத்தாவிற்கு குடிநீர் வழங்கும் திட்டமாகும்.

* கெய்னா திட்டம் - இத்திட்டத்தால் மகாராஷ்டிரா மாநிலம் பயன்பெற்று வருகிறது. சமீபத்தில் நிலநடுக்கத்தால் இத்திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய போக்குவரத்து

 இரயில் போக்குவரத்து

* இந்திய போக்குவரத்தின் அடிப்படை பரிமாணங்கள் இரயில் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வான்வழிப்போக்குவரத்து எனலாம்.

* இந்திய இருப்புப் பாதையானது 16 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு பொது மேலாளரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

* உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய இரயில்வே அமைப்பைக் கொண்ட நாடு இந்தியா.

* உலகிலேயே அதிக பணியாளர்களைக் கொண்டு ஒரே துறையாக செயல்பட்டு வரும் துறை - இந்திய ரயில்வே துறை.

* இந்தியாவின் முதல் இருப்புப் பாதை பம்பாயிலிருந்து தானா வரை(34 கி.மீட்டர்) 1853ல் துவங்கப்பட்டது.

* தற்போது இந்திய இருப்புப் பாதைகளின் நீளம் சுமார் 63,140 கி.மீ.

* இந்திய இரயில்வே தினமும் 14,444 தொடர்வண்டிகளை இயக்கி வருகின்றன.

* 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மொத்தம் 47 தொடர்வண்டி அமைப்புகள் இருந்து வந்தன. அவைகள் 1951-ல் தேசியமயமாக்கப்பட்டது. அதாவது நாட்டுடமையாக்கப்பட்டது.

* இந்திய இரயில்வே Brod Guage - 50 சசவீதமும், Metre Gauge - 43 சதவீதமும், Narrow Gauge -  7 சதவீதம் என்று மூன்று வகையான இருப்புப் பாதைகளை அமைத்து செயல்பட்டு வருகின்றன.

* இந்திய ரயில்வே 16 மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. இதில் வடக்கு இரயில்வே சுமார் 11000 கி.மீ நீள இருப்புப் பாதையுடன் மிக நீண்டதாக விளங்குகிறது.

* இந்திய இரயில்வே 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி தனது 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.

* கொங்கன் இரயில்வே திட்டம் மார்ச் 1990ல் துவங்கப்பட்டது. இத்திட்டம் கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களை குறுகிய வழியில் இணைக்கும் ஒரு திட்டமாகும். இத்திட்டம் சுமார் 760 கி.மீ. தூரத்தை இணைக்கிறது.

* இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சதாப்தி அதிவேக இரயில் இயங்கி வருகின்றன.

* புதுதில்லிக்கும் மும்பைக்கும் இடையே செல்லும் அதிவிரைவு இரயில்களிலும், ராஜஸ்தானில் இயங்கக்கூடிய அரண்மனை இராஜஸ்தானி இரயிலிலும் தொலைபேசி வசதிகள் செய்யப்பட்ட இரயில்கள் இயங்கி வருகின்றன.

* 1994 ஆம் ஆண்டு முதல் அதிவிரைவு இரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது இந்திய இரயில்வே.

* 1985-ல் நீராவி இரயில் இயந்திரங்கள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது.

* 1995-ல் இரயில் முன்பதிவு முழுவதும் கணினி மயமாக்கப்பட்டது.

இந்திய இரயில்வே மண்டலங்கள் மற்றும் தலைமையிடம், தொடங்கப்பட்ட ஆண்டு, பயணிக்கும் தூரங்கள்(கிமீ):

01. வடக்கு இரயில்வே (NR ) 1952 -ம் ஆண்டு முதல் 6968 கிமீ தூரம் தலைமையிடம் - தில்லி

02. வடகிழக்கு இரயில்வே (NER ) 14.4.1952-ம் ஆண்டு முதல் 3667 கி.மீ தூரம் தலைமையிடம் கோரக்பூர்.

03. வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே (NFR ) 15.01.1958 -ம் ஆண்டு முதல் 3907 கி.மீ தலைமையிடம் - குவஹாத்தி

04. கிழக்கு இரயில்வே (ER ) 1952-ம் ஆண்டு முதல் 2414 கி.மீ தலைமையிடம் கொல்கத்தா.

05. தென்கிழக்கு இரயில்வே (SER ) 1955-ம் ஆண்டு முதல் 2631 கி.மீ. தலைமையிடம் கொல்கத்தா.

06. தென்மத்திய இரயில்வே (SCR ) 02.10.1966 -ம் ஆண்டு முதல் 5803 கி.மீ தலைமையிடம் செகந்திராபாத்.

07. தென்னக இரயில்வே (SR ) 14.04.1951 -ம் ஆண்டு முதல் 5098 கி.மீ தலைமையிடம் சென்னை.

08. மத்திய இரயில்வே (CR)  05.11.1951 -ம் ஆண்டு முதல் 3905 கி.மீ தலைமையிடம் மும்பை

09. மேற்கு இரயில்வே (WR) 05.11.1951 -ம் ஆண்டு முதல்  6182 கி.மீ தலைமையிடம் மும்பை

10. தென்மேற்கு இரயில்வே (SWR) 01.04.2003-ம் ஆண்டு முதல் 3177 கி.மீ தலைமையிடம் ஹூப்ளி

11. வடமேற்கு இரயில்வே (NWR) 01.10.2002 -ம் ஆண்டு முதல் 5459 கி.மீ. தலைமையிடம் ஜெய்ப்பூர்

12. மேற்குமத்திய இரயில்வே (WCR)  01.04.2003 -ம் ஆண்டு 2965 கி.மீ. தலைமையிடம் ஜபல்பூர்

13. வடமத்திய இரயில்வே (NCR) 01.04.2003 -ம் ஆண்டு முதல் 3151 கி.மீ. தலைமையிடம் அலகாபாத்

14. தென்கிழக்குமத்திய இரயில்வே (SECR)  01.04.2003 -ம் ஆண்டு முதல் 2447 கி.மீ. தலைமையிடம் பிலாஸ்பூர்

15. கிழக்குக்கடற்கரை இரயில்வே (ECoR) 01.04.2003 -ம் ஆண்டு முதல் 2572 கி.மீ. தலைமையிடம் புவனேஸ்வர்

16. கிழக்குமத்திய இரயில்வே (ECR) 01.10.2002 -ம் தேதி ஆண்டு முதல் 3628 கி.மீ. தலைமையிடம் ஹாஜிபூர்

சாலைப் போக்குவரத்து

* இந்தியாவில் 1996 ஆம் ஆண்டு வரையிலான மதிப்பீட்டின்படி இந்தியாவில் 33 லட்சம் கி.மீ.க்கும் அதிகமான தொலைவி்ற்கு சாலை வசதிகள் உள்ளன.

* இந்திய மாநிலங்களில் கர்நாடகா மிக நீண்ட சாலைகளுடன் (64000 கி.மீ) முதலிடத்தை பெற்று வருகிறது.

* சாலைகளை பொருத்தவரை தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், கிராம வழிச் சாலைகள், சர்வதேச சாலைகள் என்று பல வகைகளில் செயல்பட்டு வருகின்றன.

* இந்தியாவின் எல்லா மாநிலங்களின் தலைநகரையும் இணைக்கும் விதமாக சுமார் 30 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன.

* தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ் தங்கநாற்கரத் திட்டம் (Golden Quardrilateral Connecting four Metropolican Cities) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நான்கு முக்கிய நகரங்களான தில்லி, மும்பை, சென்னை மற்றும் கல்கத்தா ஆகியவை இணைக்கப்பட உள்ளன.(5952 கி.மீ)

* வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் விதமாக சுமார் 7300 கி.மீ நீளத்தில் ஸ்ரீநகர் முதல் கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* தேசிய நெடுஞ்சாலைகளுக்கான திட்டங்கள் அனைத்தையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது.

* இந்திய சாலை கட்டுமான நிறுவனம் 562.88 கோடி இழப்பால், தொழில் தகராறுகள் சட்டம் 1947ன் கீழ் இந்நிறுவனம் 2000ம் ஆண்டு களைக்கப்பட்டது

வான்வழிப் போக்குவரத்து

* இந்தியாவில் மொத்தம் 5 சர்வதேச விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை: 01. இந்திரகாந்தி சர்வதேச விமான நிலையம், பாலம், தில்லி 02. டம் டம் விமான நிலையம். 03. கல்கத்தா, சாந்தா குரூஸ் விமான நிலையம், கல்கத்தா 04. சென்னையில் மீனம்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா சர்வதேச விமான நிலையம் 05. கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம்.

* ஏர் இந்தியா நிறுவனம் 1953-ல் தோற்றுவிக்கப்பட்டு 1998 ஆம் ஆண்டு வரை சுமார் 90 நாடுகளுடன் விமானத் தொடர்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டு செயல்பட்டு வருகிறது.

* ஏர் இந்தியா நிறுவனம் வெளிநாட்டு வான்வழிப் போக்குவரத்தையும் மேற்கொண்டு வருகிறது.

* 1953-ல் தோற்றுவிக்கப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

* Pawan Hans Limited என்ற நிறுவனம் தேவைப்படும் நபர்களுக்கு ஹெலிகாப்டர் சரிவீஸ் வழங்கும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. பொதுவாக எண்ணெய் நிறுவனங்கள் இவற்றின் பயன்பாட்டைப் பெரிதும் பெற்று வருகின்றன.


நீர்வழிப் போக்குவரத்து

உள்நாட்டு நீர்வழிகளின் மேம்பாட்டிற்காக 1985-ல் இயற்றப்பட்ட சட்டத்தின்படி கப்பல் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் 1986 அக்டோபர் 27-ல் இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் அமைக்கப்பட்டது.

உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமையகம் - உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைந்துள்ளது.

* இந்தியாவின் பன்னாட்டு வர்த்தகத்தில் நீர்வழிப்பாதை போக்குவரத்து மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.

* வளரும் நாடுகளிடையே சரக்குக் கப்பல்களின் நிலையில் இந்தியா 15-வது இடத்தில் உள்ளது.

* இந்தியாவில் பெரிய துறைமுகங்களும், சிறிய துறைமுகங்களும் என இரு துறைமுகங்கள் செயல்பட்டு வருகின்றன. 12 பெரிய துறைமுகங்கள் அனைத்தும் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

* மேற்குக் கடற்கரையில் கண்ட்லா, மும்பை, மர்மகோவா, மங்களூர் மற்றும் கொச்சி துறைமுகங்களும், கிழக்குக் கடற்கரையில் கொல்கத்தா, பாரதீப் விசாகப்பட்டினம்,

சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களும் அமைந்துள்ளன.

* கண்ட்லா துறைமுகம் ஒரு Tidal Port ஆகும்.

* விசாகப் பட்டினம் துறைமுகம் ஆழமிகுந்த துறைமுகமாக செயல்பட்டு வருகிறது.

* சென்னை துறைமுகம் ஒரு செயற்கைத் துறைமுகமாகும்.

* சமீப காலமாக தமிழகத்தின் எண்ணூர் துறைமுகம் 12-வது பெரிய துறைமுகமாக செயல்பட்டு வருகிறது.

* மும்பை ஒரு சிறந்த இயற்கைத் துறைமுகமாகும். சூயஸ் கால்வாய் வழியாக வரும் கப்பல்கள் மும்பையில் தங்கிப் பின்னர் செல்கின்றன.

* மேற்கு ஐரோப்பிய ஆப்பிரிக்க நாடுகளை நோக்கியிருக்கும் மும்பை துறைமுகத்தை இந்தியாவின் மேற்கு வாயில் என்பர். இதுவே இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகம் மற்றும் முதல் துறைமுகமாகும்.

* மும்பை துறைமுகத்தின் நெரிசலைத் தவிர்ப்பதற்காக நவஹேவா என்னுமிடத்தில் கட்டப்பட்ட துறைமுகம் ஜவகர்லால் நேரு துறைமுகம் ஆகும். இது ஒரு நவீன துறைமுகம் ஆகும்.

* போர்ச்சுகீசிய துறைமுகமாக இருந்த மர்மகோவா துறைமுகமும் ஒரு முக்கிய இந்திய இயற்கைத் துறைமுகமாகும். இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் இரும்புத் தாதுவில் சுமார் 60 சதவிதம் இத்துறைமுகத்தின் வழியாகவே ஏற்றுமதியாகிறது.

* கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள புதிய மங்களூர் துறைமுகம் குதிரேமுக் என்ற இடத்தில் உள்ள இரும்புத் தாதுக்களை ஏற்றுமதி செய்ய இத்துறைமுகம் பயன்படுகிறது.

* நீர்வழிப் போக்குவரத்தில் அலகாபாத் முதல் ஹால்தியா வரையிலான நீர்வழிப்பாதை NW-1 என்று குறிப்பிடப்படுகிறது.

சீவக சிந்தாமணி - 7 ஆம் வகுப்பு சமச்சீர்

வீழ்ந்து வெண்மழை  தவழும் விண்ணுறு பெருவரை பெரும்பாம்பு
ஊழ்ந்து தோலுரிப் பனபோல் ஒத்த மற்றவற் றருவி
தாழ்ந்து வீழ்ந்தவை முழவின் ததும்பின் மதுகரம் பாடச்
சூழ்ந்து மாமயி லாடி நாடகம் துளக்குறுத் தனவே .

பொருள் :  வெண்மழை வீழ்ந்து தவழும் விண் உறு பெருவரை - வெள்ளிய முகில் படிந்து தவழும் வானுயர் பெருமலை; பெரும் பாம்பு ஊழ்ந்து தோல் உரிப்பன போல் ஒத்த - பெரிய பாம்பு கழன்று தோலுரிப்பன போலேயாய், அம் முகில் போன பிறகு அப் பாம்பை ஒத்தன; அவற்று அருவி தாழ்ந்து வீழ்ந்தவை முழவின் ததும்பின - அம்மலையினின்றும் அருவிகள் தாழ்ந்து வீழ்கின்றவை முழவு போல முழங்கின; மதுகரம் பாடச் சூழ்ந்து மாமயில் ஆடி நாடகம் துளக்கு உறுத்தன - (அம் முழக்கம் கேட்டு) வண்டுகள்பாட, வளைந்து மயில்கள் ஆடிப், பிறர் ஆடும் நாடகங்களை வருத்தம் உறுத்தின.

சொற்பொருள்:

  விண் – வானம்
  வரை – மலை
  முழவு – மத்தளம்
  மதுகரம் – தேன் உண்ணும் வண்டு

தமிழில் முழுமையாகக் கிடைக்கும் காப்பியங்களுள் ஒப்பற்றதாய்த் திகழ்வது சீவக சிந்தாமணி ஆகும். சீவக சிந்தாமணி என்னும் காப்பியம் கதை அமைப்பு, கதை மாந்தர் படைப்பு, நூற்பயன் முதலான கூறுகளால் முழுமை பெற்றுத் திகழ்கின்றது. விருத்தம் என்னும் புதிய பாஇனம்-இந்நூலில் முதன் முறையாகக் கையாளப்பட்ட சிறப்புடையது. அதனால் இக்காப்பியம் பிற்காலத்தில் எழுந்த கம்பராமாயணம், பெரியபுராணம் முதலிய காப்பியங்களுக்கு அடிப்படையாகவும், முன்னோடியாகவும் அமைந்துள்ள பெருமையுடையது.

பெயர்க் காரணம்

சிந்தாமணி - ஒளி கெடாத ஒரு வகை மணி. இந்நூலிற்கு இப்பெயர் அமைந்ததற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றுள் ஒளி கெடாத மணி போன்றது என்ற காரணமே இந்நூலுக்குப் பொருத்த மானதாகும். இந்நூல் தோன்றிய காலம் முதல் புகழ் குன்றாது நின்று நிலவுவதே தக்க சான்றாகும்.

இலக்கண நூலார், சிந்தாமணி என்பது நெஞ்சின் கண் பொதிந்து வைத்தற்குரிய ஒரு மணி போன்றது என்பர். அதுபோல் இந்நூலைப் படிப்போர் அறிவுப் பொருள் அனைத்தும் ஒருங்கே பெறுமாறு படைத்தலால் இந்நூல் இப்பெயர் பெற்றது எனலாம்.

காவியத் தலைவனான தன் மகனை விசய மாதேவியார் முதன் முதலாக இட்டு விளித்த பெயர் சிந்தாமணி என்பதாகும். பின்னர் வழிபடு தெய்வம் வானொலியாக ‘சீவ’ என்று வாழ்த்தியது. அதற்குப் பின் அக்குழந்தைக்குச் சீவகன் என்று பெயரிட்டனர். சீவகனின் வரலாற்றை முழுமையாகத் தெரிவிப்பதால் சீவக சிந்தாமணி என்று இந்நூல் பெயர் பெற்றது.

நூலாசிரியர்

சீவக சிந்தாமணி என்னும் காப்பியத்தைப் படைத்தவர் திருத்தக்க தேவர். சோழர் குலத்தில் அரச மரபைச் சார்ந்தவர். சமண சமயத்தைச் சார்ந்தவர். தீபங்குடியில் பிறந்தவர். இவருடைய காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு ஆகும்.

சமணத் துறவிகள் அறக்கருத்துகளை மட்டும் அன்றி இல்லறச் சுவையையும் பாட முடியும் என்பதனை நிறுவும் பொருட்டு இந்நூலை இயற்றினார் திருத்தக்க தேவர்.குருவின் வேண்டுகோளுக்கு இணங்க நரி விருத்தம் பாடிய பிறகே சீவக சிந்தாமணியைப் பாடினார். இத்தகு சிறப்புக் கொண்ட திருத்தக்க தேவரைத் ‘தமிழ்க் கவிஞர்களுள் சிற்றரசர்’ என்று வீரமாமுனிவர் பாராட்டுகின்றார். தேவர், திருத்தகு முனிவர், திருத்தகு மகாமுனிவர், திருத்தகு மகாமுனிகள் என்னும் பெயர்களாலும் வழங்கப்படுவார்.

நூல் கூறும் செய்தி

சச்சந்தன் விசயை என்போர் சீவகனின் பெற்றோர் ஆவர். கட்டியங்காரன் என்னும் அமைச்சன் சூழ்ச்சியால் மன்னன் சச்சந்தனைக் கொன்று, ஏமாங்கத நாட்டினைக் கைப்பற்றினான். குழந்தைப் பருவம் முதற்கொண்டு சீவகனைக் கந்துக்கடன் என்னும் வாணிகன் வளர்த்து வந்தான். உரிய பருவம் எய்தியதும் தன் நாட்டைப் பெறுவதற்குத் தாயின் அறிவுரையோடு, மாமன் கோவிந்தனின் துணைக்கொண்டு போரிட்டு வென்றான், சீவகன். அச்செய்திகளை விரிவாக விளக்கிக் கூறும் நூலே சீவக சிந்தாமணி ஆகும்.

நூல் அமைப்பு

சீவக சிந்தாமணி என்னும் பேரிலக்கியம், நாமகள் இலம்பகம் முதலாக முத்தி இலம்பகம் ஈறாக, 13 இலம்பகங்களைக் கொண்டு திகழ்கின்றது. இலம்பகம் யாவும் மகளிர் பெயரினையே பெற்றுள்ளன. ஒவ்வோர் இலம்பகத்திலும் ஒரு மண நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. இலக்கியச் சிறப்பு மிக்க இந்நூலில் 3145 பாடல்கள் உள்ளன. விருத்தம் என்னும் பாவகையால் பாடப் பெற்றது.

நூலின் சிறப்பு

சீவகனின் வீர தீரச் செயல்கள், பேரழகு, பேராற்றல், போராற்றல், அரச குடும்பத்தின் செயல்கள், அரசியல் நெறிமுறைகள், மனித குல மேம்பாட்டிற்குத் தேவையான அறக்கருத்துகள் கூறுதல் முதலான பல செய்திகளைக் கொண்டதாக இந்நூல் விளங்குகின்றது. சீவகன் தன் ஆற்றலால் எட்டுப் பெண்களைத் திருமணம் செய்து கொள்கின்றான். இதனால் இந்நூலுக்கு மணநூல் என்ற பெயரும் உண்டு. திருத்தக்க தேவர் தம் நூலுக்குச் சிந்தாமணியின் சரிதம் என்றே பெயரிட்டனர்.

சிந்தாமணி ஒரு சமயக் காப்பியமாகும். வட மொழியிலுள்ள கத்திய சிந்தாமணி, சத்திர சூடாமணி, ஸ்ரீ புராணம் ஆகிய நூல்களில் சீவகன் கதை காணப்படுகிறது. அவற்றைத் தழுவித் தமிழில் சீவக சிந்தாமணி என்னும் பெரு நூலாகத் தந்துள்ளார் திருத்தக்க தேவர்.

இந்திய கனிம வளம்

* இந்தியாவில் முதன்முதலில் பயன்பாட்டிற்கு வந்த உலோகம் தாமிரம் ஆகும்.

* இந்தியாவைப் பொறுத்த வரையில் உலோகத் தாதுக்களில் இரும்பு, பாக்சைட், மாங்கனீசு போன்றவை பெருமளவிலும், செம்பு, தங்கம், காரீயம், துத்தநாகம் போன்ற ஓரளவு பங்கு பெற்று வருகின்றன.

* இந்தியாவில் பொதுவாக தாதுப்பொருட்களில் மினரல்ஸ் வளமிகுந்து காணப்படுகின்றன.

* தாதுப்பொருட்கள் தொழிற்சாலைகளின் வைட்டமின்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. இவை இயற்கையின் அன்பளிப்பு என்றும் குறிப்பிடப்படுகின்றன.

* அலோகத் தாதுக்களில் மைக்கா, சுண்ணாம்பு போன்றவை அதிகயளவில் காணப்படுகின்றன.

இரும்புத்தாது

* இந்தியா இரும்புத்தாது உற்பத்தியில் 7-வது இடத்தை பெற்றுள்ளது.

* இந்தியாவில் மிக அதிகமாகக் கிடைக்கும் இரும்புத்தாது வகை - ஹேமடைட்.

* இந்தியாவில் இரும்பின் கனிகளில் மாக்னடைட் மற்றும் ஹேமடைட் போன்றவை அதிகயளவில் கிடைக்கின்றன.

* ஹேமடைட்டில் 68 சதவீத இரும்பும், மாக்னடைட்டில் 50 - 60 சதவீத இரும்பும், லிமோனைட்டில் 30 சதவீத இரும்பும் காணப்படுகின்றன.

* சமீபத்திய தகவலின்படி 13000 மில்லியன் டன்  அளவிற்கு இரும்புத்தாது இரும்பு வெட்டியெடுக்கப்படமாலே உள்ளதாகத் தெரிவிக்கிறது. அவற்றில் தரமான இரும்புத்தாது ஒரிசா மாநிலம் கியாஞ்சார், போனை, மயூர்பஞ்ச் மாவட்டங்களில் கிடைக்கிறது.

* பீகார் மற்றும் ஒரிசா ஆகிய இரு மாநிலங்களிலும் இரும்புத்தாது உற்பத்தியில் 75 சதவீதம் பங்களிக்கிறன. எனவே இவை இரண்டையும் இந்திய இரும்புத்தாது படலம் என்று குறிப்பிடுகின்றனர்.

* மத்தியப்பிரதேசத்தில் உள்ள துர்க், பஸ்தார் மாவட்டங்களிலும், சத்தீஸ்கரில் உள்ள ரெய்ப்பூரிலும், தமிழகத்தில் சேலம்(கஞ்சமலை) மற்றும் மதுரையிலும், கர்நாடகாவில் குத்ரேமுக் (சமீபத்தில் மூடப்பட்ட குத்ரேமுக் இரும்புத்தாது தொழிற்சாலை) மற்ரஉம் பாபா புதான் குன்றுகளிலும் இரும்புத்தாது வெட்டி எடுக்கப்படுகிறது.

* ஜப்பானின் உதவியோடு மத்தியப்பிரதேசத்தின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள பைலாடிலா சுரங்கம் செயல்பட்டு வருகிறது.

* விசாகப்பட்டினத்திலிருந்து இரும்புத்தாது ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

* இந்தியாவின் இரும்புத்தாதுவிற்கு சர்வதேச சந்தையில் நல்ல வாய்ப்புகள் இருந்து வருகின்னறன. காரணம் அதன் தரமே ஆகும்.

மாங்கனீசு

* இரும்பு எஃகுத் தொழிலுக்கு அடிப்படையானது மாங்கனீசு.

* மாங்கனீசில் கலந்துள்ள இரும்பு மிகவும் கடினமானதாகும்.

* மாங்கனீசு இருப்பு வைப்பதில் இந்தியா ரஷ்யாவிற்கு அடுத்த இடத்தைப் பெற்று வருகிறது.

* இந்தியாவில் மாங்கனீஸ் உற்பத்தியில் ஒரிசா முதலிடத்தையும், கர்நாடகா இரண்டாமிடத்தையும் பெற்று வருகின்றன.

* உலகளவில் இந்தியா மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.

பாக்சைட்

* பாரக்சைட் அலுமினியக் கனியாகும்.

* மின்னாற்பகுப்பு முறையில்தான் உலோகத்தைத் தனிமைப்படுத்த முடியும். எனவே அலுமினிய உருக்குத் தொழில் குறைந்த விலையில் மிகுந்த அளவு மின்சக்தி காணப்படும் பகுதிகளிலேயே சாத்தியமாகும்.

* கேரளாவில் ஆல்வாயிலும், தமிழ்நாட்டில் மேட்டூரிலும் அலுமினிய உருக்கு ஆலைகள் அமைந்துள்ளன. விமானக் கட்டுமானத் தொழிலுக்கு மிக முக்கியத் தேவை பாக்சைட் ஆகும்.

* ஒரிசா, ஆந்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, பீகார் ஆகிய இடங்களில் கிடைக்கிறது.

* இங்கு கிடைக்கும் தாதுக்கள் ஜப்பானுக்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

* தமிழ்நாட்டில் நீலகிரி மலைகளில் பாக்சைட் தாது கிடைக்கிறது.

மைக்கா

* மைக்கா உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

* உலகிலேயே அதிகயளவு மைக்கா இருப்பு வைத்துள்ள நாடு இந்தியா.

* உலகின் 90 சதவிகித மைக்கா உற்பத்தியை இந்தியா செய்து வருகிறது.

* இந்தியாவில் வெள்ளை மைக்கா, கறுப்பு மைக்கா, ஆம்பர் மைக்கா என மூன்று வகை மைக்கா கிடைக்கிறது.

* இந்தியாவில் மைக்கா உற்பத்தியில் பீகார் மாநிலம் முதலிடம் வகிக்கிறது.

* இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மைக்காவில் 70 சதவீதம் பீகாரில் கிடைக்கிறது.

* பீகாரில் கயா, ஹசாரிபாக், முங்கர் ஆகிய மாவட்டங்களில் கிடைக்கிறது.

* உயர்தரமான பெங்கால் ரூபி மைக்கா பீகாரில் கிடைக்கிறது.

* பீகாரின் கிரித் துரங்கம், கோதர்பா சுரங்கம் ஆகிய சுரங்கங்களில் அதிகயளவில் மைக்கா உற்பத்தி செய்யப்படுகிறது.

* பச்சை மைக்கா ஆந்திரப்பிரதேசத்திலுள்ள நெல்லூர் மாவட்ட ஆத்மபூர் மற்றும் கடூர் சுரங்கங்களிலும், தமிழ்நாட்டில் சேலம், நீலகிரி பகுதிகளிலும், இராஜஸ்தானில் பில்வாரா, ஆஜ்மீர், ஜெய்ப்பூர், உதயப்பூர் பகுதிகளிலும், மத்திய பிரதேசத்தின் பஸ்தார் மாவட்டப்பகுதிகளிலும் மைக்கா கிடைக்கிறது.

* மைக்கா உற்பத்தியில் இந்தியா பிரேசில் நாட்டுடன் போட்டியிட்டு வருகிறது.

வெள்ளி

* காரீயம் மற்றும் துத்தநாக தாதுக்களைப் பிரித்தெடுக்கும்போது கிடைப்பதே வெள்ளி.

* வெள்ளியின் முக்கிய சுரங்கம் இராஜஸ்தானில் உள்ள சாவார் சுரங்கம்.

தங்கம்

* 1871 முதல் கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயல் முக்கியச் சுரங்கமாக செயல்பட்டுகிறது. இதுவே உலகின் மிக ஆழமான தங்கச் சுரங்கமாகும்.

* ஹட்டி சுரங்கமும், கர்நாடகாவின் ரெய்ச்சூர் மாவட்ட சுரங்கமும் தங்கத்தின் முக்கியச் சுரங்கமாக விளங்குகிறது.

* ஆந்திரப்பிரதேசத்தில் அனத்பூர், ராம்கிரி பகுதிகளிலும் தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது.

* ஆந்திரப்பிரதேசத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் ஒரு தங்கச்சுரங்கம் செயல்பட்டு வருகிறது.

* இந்தியாவின் தங்க இருப்பு சுமார் 66700 கிலோ ஆகும். தற்போது தங்கத்தின் உற்பத்தி ஆண்டுதோறும் குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




நிலக்கரி

* நிலக்கரி அயன மண்டலத்தின் பெருங்காடுகள் படிவங்களால் மூடப்பட்டு, நீண்ட கால அளவில் கரிமமாக்கப்பட்டு தோன்றும் படிவுப்பாறைகள் நிலக்கரி எனப்படும்.

* 1774ல் மேற்கு வங்காளத்தில் உள்ள இராணிகஞ்ச் பகுதி நிலக்கரி வயலில் முதன்முதலாக நிலக்கரி வெட்டியெடுக்கப்பட்டது.

* தாவரப் பொருட்களை வெப்பமும். அழுத்தமும் நிலக்கரியாக மாற்றுகின்றன. சக்தியின் மூல ஆதாரம் இதுவே ஆகும். எனவேதான் தொழிற்சாலைகளின் தாய் நிலக்கரி என்று அழைக்கப்படுகிறது.

* இரும்பு எஃகு உற்பத்தியில் நிலக்கரி கச்சாப் பொருளாகப் பயன்படுகிறது.

* உலக நிலக்கரி இருப்பு அளவில் 1 சதவீதம் மட்டுமே இந்தியாவில் உள்ளது.

* இந்தியாவில் உள்ள நிலக்கரி பெரும்பாலும் பிட்டுமினஸ் வகையைச் சார்ந்தவை. அதாவது தரம் குறைந்த சாம்பலை அதிகமாகத் தரக்கூடிய நிலக்கரி வயல்களே இந்தியாவில் அதிகமாக காணப்படுகின்றன.

* இந்தியாவில் இரு வகையான நிலக்கரி வயல்கள் உள்ளன. அவை: 01. கோண்ட்வானா கால நிலக்கரி வயல். 02. டெர்ஷியரி கால நிலக்கரி வயல். இவை சுமார் 2 சதவீதம் மட்டுமே உள்ளது.

* தமிழ்நாட்டில் நெய்வேலி, அஸ்ஸாமின் மகும் பகுதி, இராஜஸ்தானின் பிக்கானிர் போன்ற இடங்களில் டெர்ஷியரி கால நிலக்கரி வயல்கள் உள்ளன.

* கோண்ட்வானா கால நிலக்கரி வயல்களில் மேற்கு வங்காளத்தின் இராணிகஞ்ச் நிலக்கரி வயல் மிகப் பழமையானதாக சுமார் 1267 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது.

* ஜார்க்கண்ட் நாநிலத்தின் ஜாரியா, பொக்காரோ, கிரிஷ், கரன்புரா, ராம்கார், டால்டோன்கஞ்ச், அவுரங்காபாத், ஹட்டார் மற்றும் ராணிகஞ்ச் ஆகிய இடங்களிலும் , * ஆந்திரப்பிரதேசத்தின் சிங்கரேணி பகுதியிலும் (இராமகுண்டம்), மத்தியப்பிரதேசத்தின் கோர்பா பகுதியிலும் நிலக்கரி வயல்கள் உள்ளன.

* இந்தியாவில் நிலக்கரி இருப்பில் முதலிடம் வகிக்கும் மாநிலம் ஜார்க்கண்ட ஆகும். இங்கு சமார் 32 சதவீத நிலக்கரி இருப்பு உள்ளது.

* ஜார்க்கண்ட மாநிலம் நிலக்கரி உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது.

* மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் இரண்டும் கூட்டாக நிலக்கரி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. ஒரிசா மூன்றாம் இடத்தில் உள்ளது.

* தமிழ்நாட்டில் நெய்வேலி, குஜராத் மற்றும் இராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பழுப்பு நிலக்கரி கிடைக்கிறது.

* இந்தியாவின் முதல் மற்றும் முக்கிய நிலக்கரிச் சுரங்கம் தற்போது ஜார்க்கண்ட மாநிலத்தில் உள்ள ராணிகஞ்ச் ஆகும்.

* பெரும்பாலான கோண்ட்வானா கால நிலக்கரி வயல்கள் தமோதர் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ளது.

* நிலக்கரியிலிருந்து உரங்கள் மற்றும் 'குக்கிங் கோல்' ஆகியவையும் உற்பத்தி செய்யப்படுகின்றன

* 1983 முதல் உலக நிலக்கரி உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது.

தாமிரம்

* தாமிர உற்பத்தியல் இந்தியா பற்றாக்குறையிலேயே இருந்து வருகிறது.

* தாமிர உற்பத்தியில் மத்தியப்பிரதேசம் முதலிடத்திலும், இராஜஸ்தான் இரண்டாம் இடத்திலும் இருந்து வருகின்றன.

* கேத்ரி தாமிரச் சுரங்கம் (இராஜஸ்தான்) மிகவும் புகழ்பெற்றதாகும்.

* இராஸ்தானின் துரதேரரே, கோ தாரிபா ஆகிய இடங்களிலும், ஜார்க்கண்டின் சிங்பம் மாவட்டத்தின் மொசபானி, ரக்கா, தோபனி சுரங்களிலும், ஆந்திராவின் கம்மம் பகுதியும், ஹாசன் மறஅறும் சித்ரதுர்கா (கர்நாடகா) பகுதிகளிலும், இராஜஸ்தானின் ஆல்வார் மற்றும் ஜூஞ்ஜூனு பகுதிகளிலும் தாமிர சுரங்கங்கள் அமைந்துள்ளன.

பெட்ரோலியம்

* எரிபொருள் பயன்பாட்டில் முதலிடம் வகிப்பவை பெட்ரோலியம்.

* இந்தியாவில் 1867 ஆம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தின் திக்பாய் பகுதியின் மக்கும் என்னும் இடத்தில் பெட்ரோலியம் வெளிக்கொணரப்பட்டது.

* பெட்ரோலியத்தை அதன் முக்கியத்துவத்தின் பொருட்டு திரவத் தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

* இந்தியாவின் பெட்ரோலியத் தேவையில் 33 சதவிகிதத்தை நாமே பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது. மீதமுள்ள 67 சதவிகித பெட்ரோலியமே இறக்குமதி செய்யப்படுகின்றன.

* இந்தியாவில் அதிக அளவில் பெட்ரோலியம் உற்பத்தி (65 சதவிகிதம்) செய்யப்படும் இடம் மும்பை ஹை ஆகும்.

* மிகக்குறைவாக உற்பத்தி செய்யப்படும் இடம் அருணாச்சலப்பிரதேசம் ஆகும்.

* தமிழ்நாட்டில் சுமார் 14 சதவிகிதம் பெட்ரோலியம் உற்பத்தி செய்யப்படுகிறது.

* இந்தியாவின் மிகப்பழமையான எண்ணெய்க் கிணறு திக்பாய் எண்ணெய் வயல்.

* குஜராத் காம்பே வளைகுடா பகுதியில் கலோல், அங்கலேஸ்வர், லூனேஜ் ஆகிய இடங்களிலும், அஸ்ஸாமில் திக்பாய், மொரான், ககர்கட்டியா, சிப்சாகர் ஆகிய இடங்களிலும், மகாராஷ்டிராவில் மும்பைக் கடற்கரையின் மும்பை ஹை பகுதியிலும், மேலும் மகாராஷ்டிராவின் பசீன் பகுதியிலும் எண்ணெய் வயல்கள் உள்ளன.

* இந்தியாவில் தற்போது 11 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. அவை: பீகார் மாநிலம் பரெளனி, மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பை, கேரளா மாநிலம் கொச்சி, அஸ்ஸாம் மாநிலம் திக்பாய், குவஹாத்தி, மேற்கு வங்கா மாநிலம் ஹால்தியா, ஆந்திரப்பிர மாநிலம் விசாகப்பட்டினம், .குஜராத் மாநிலம் கயட்டி, தமிழ்நாடு மாநிலம் சென்னை மற்றும் நரிமணம், .உத்திரப்பிரதேசம் மாநிலம் மதுரா, ஹரியானா மாநிலம் கர்னால், குஜராத் மாநிலம் அங்கலேஸ்வார், கலோர், நவகம், கொசம்பா, காதனா, அலியாபெட் தீவுகள் ஆகிய இடங்களில் பெட்ரோலியம் உற்பத்தி செய்யப்படுகிறது.

திரிகடுகம் - 7 ஆம் வகுப்பு சமச்சீர்

 உண்பொழுது நீராடி யுண்டலும் என்பெறினும்
         பால்பற்றிச் சொல்லா விடுதலுந் - தோல்வற்றிச்
         சாயினுஞ் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றுந்
         தூஉய மென்பார் தொழில்.

நீராடி யுண்பதும், பொய்க்கரி புகலாமலிருப்பதும், உயிர் நீங்கினும் சான்றாண்மை நீங்காதிருப்பதும் தூயவர் செயல்கள்

        இல்லார்க்கொன் றீயும் உடைமையும் இவ்வுலகில்
        நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் - எவ்வுயிர்க்கும்
        துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்
        நன்றறியும் மாந்தர்க்கு உள.


வறியவர்க்கு பொருளை அளித்தல், இவ்வுலகத்துப் பொருள்களின் நிலையாமையை அறிந்து நல்வழி நிற்றல் , எவ்வுயிரையும் துன்புறுத்தாத நிலையில் வாழ்தல் என்னும் இம்மூன்றும்  அறவழியில் நடக்கும் மக்களுக்கே என்றும் உண்டு  


       முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்

       நிறையிலான் கொண்ட தவமும் - நிறைஒழுக்கம்
       தேற்றாதான் பெற்றவனப்பும் இவைமூன்றும்
       தூற்றின்கண் தூவிய வித்து.

முறை புரியமாட்டாதவன் தலைவனா யிருப்பதும், மனவலி யில்லாதவன் தவஞ் செய்வதும், நன்னடக்கை யில்லாதவன் அழகும் வீண் என்பது.
  

திரிகடுகம்

காரம், கார்ப்பு (உறைப்பு) என்று பொருள்படும். கடுக்கும் பொருளாகிய சுக்கு, மிளகு, திப்பிலிகளுள் ஒன்றையோ அல்லது இம்மூன்றையுமோ கடுகம் என்பது உணர்த்தும். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றையும் குறிக்கும்போது இது திரிகடுகம் என்று சொல்லப்பெறும். (பிங்கல நிகண்டு, 352) 

ஆசிரியர் 

திரிகடுகம் என்ற உயிர் மருந்து நூலை ஆக்கியவர் நல்லாதனார். ஆதனார் என்பது இயற்பெயர். ‘நல்’ என்பது அடைமொழி. காப்புச் செய்யுளில், பூவை வண்ணன் ஆகிய திருமால் உலகம் அளந்தது, குருந்தமரம் சாய்த்தது, மாயச் சகடம் உதைத்தது ஆகியவை பற்றிக் கூறியிருப்பதால் இவர் வைணவ சமயத்தவர் என்பது பெறப்படும். இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. 

 நூல் அமைப்பும் சிறப்பும் 

திரிகடுகம் காப்புச் செய்யுள் உட்பட 101 வெண்பாக்களைக் கொண்டது. முதற் பாடலிலேயே நூலின் பெயர்க்காரணத்தை, ‘திரிகடுகம் போலும் மருந்து’ என்று ஆசிரியரே குறிப்பிடுகின்றார். திருக்குறள், நாலடியார் போன்ற நூல்களின் கருத்துகளை இந்நூல் பெரிதும் பின்பற்றுகிறது. கொல்லாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் போன்ற இவ்வுலகிற்குரிய நல்வழிகளையும் அவாவறுத்தல், மெய்யுணர்தல் போன்ற மறுமைக்குரிய நல்வழிகளையும் இந்த நூல் எடுத்துக்காட்டுகின்றது. இது மனித சமுதாயத்திற்கு இம்மைக்கும் மறுமைக்கும் நல்ல வழியினைக் காட்டும் நூலாகும். ஒவ்வொரு வெண்பாவிலும் மூன்று அறக்கருத்துகள் சொல்லப்படுகின்றன.

இந்நூலில் அறத்தின் உயர்வும் சிறப்பும் எடுத்துரைக்கப்படுகிறது. இல்லறம் நல்லறமாக ஆவதற்குக் கணவனும் மனைவியும் எப்படி வாழ்தல் வேண்டும் என்பது 100 பாடல்களில் 35 இடங்களில் கூறப்படுகிறது.