Thursday, June 14, 2018

குறுந்தொகை - 9 ஆம் வகுப்பு சமச்சீர்

குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று
இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.

நான்கு முதல் எட்டு வரையான அடிகளைக் கொண்டமைந்த 401 பாடல்களின் தொகுப்பு இது

இந்த நூலின் 380 பாடல்களுக்குப் பேராசிரியர்’ உரை எழுதியுள்ளார்.

பேராசிரியர் உரை எழுதாத 20 பாடல்களுக்கும் நச்சினார்க்கினியர்’ உரை எழுதிச் சேர்த்துள்ளார். 

பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியுள்ளார் 

குறுந்தகைப் பாடல்களில் சோழன் கரிகால்வளவன்குட்டுவன்திண்தேர்ப் பொறையன்பசும்பூண் பாண்டியன்போன்ற பேரரசர்கள் மற்றும் பாரிஓரிநள்ளிநன்னன் போன்ற சிற்றரசர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இடம் பெறுகின்றன.

'கொங்குதேர் வாழ்க்கைஎன்ற இரண்டாம் பாடல் இறையனார் பாடிதருமி என்ற புலவருக்கு "பொற்கிழி" வழங்கச் செய்தது சிறந்த வரலற்றுச் சான்றாகும்

"வினையே ஆடவ்ர்க்கு உயிரே"- என்ற தொடர் ஆண்களின் கடமையைக் கூறுகிறது

No comments:

Post a Comment